Tuesday, October 20, 2009

தலைகீழ் மரமாய் நான்

சூனியத்தின் சுயநலங்களை சூசகமாய்ப்
புரிந்துகொள்ளும் நாள் ஒன்று வரும்.
அன்று கடல்மிதக்கும் வானத்திலே
தலைகீழ் மரமாய் நான்தொங்குவேன் - நீயில்லாமல்!

எதையெழுத எப்படியெழுத எங்கெழுத!
உன் நினைவுகளில்லாமல் வறண்டுபோனபின்
எதை எப்படிச் செய்தாலென்ன?
உனக்கே உனக்காக இந்த வரிகளை எழுதும்போது கவனித்தேன்
உன்னை எத்தனை முறை நினைக்கவேண்டியிருக்கிறது என்று!

காலம் மறந்தால் காதலாம்! காதல் மறந்தால்?! நனவில் கனவுகண்டாலும் காதலாம்! கனவெல்லாம் காலம் தவறினால்?
நினைவுகளை வைத்து காலம் செய்ய முடியுமா?

'என்னத்த சொல்ல' என்று உட்கார்ந்தேன்.
எழுதி ஏழுதிக் குவித்தேன்!
உன் பெயரைக்கூட நான் யோசிக்கக் கூடாதா?
மூளையில் எங்கு பதிந்திருந்தன இந்த சங்கிலி வார்த்தைகள்!

No comments:

Post a Comment